ஞாயிறு, 29 மே, 2011

கூகுள் இந்தியா - சில தகவல்கள்

 அண்மையில் கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன், இந்தியாவில் கூகுள் தளம் பயன்படுத்துவது குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இன்டர்நெட்டைப் பயன்படுத்து பவர்களில் அதிகமான எண்ணிக்கை உள்ள நபர்களைக் கொண்ட நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. பத்து கோடிக்கும் மேலானவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 4 கோடி பேர் தங்கள் அலுவலகங்களில் இன்டர்நெட்டைப் பயன்படுத்து கின்றனர். 3 கோடி பேர் இன்டர்நெட் மையங்களில் காண்கின்றனர். ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வீடுகளில், பிராட்பேண்ட் இணைப்பு மூலம் பயன்படுத்தி வருகின்றனர்.
மொபைல் வழி இன்டர்நெட்டைப் பொறுத்த வரை, இந்தியாவில் 4 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். ஒரு வாரத்தில், 3 கோடி அப்ளிகேஷன் புரோகிராம்கள், மொபைல் போன் வழி டவுண்லோட் செய்யப்படுகின்றன.
கடந்த 12 மாதங்களில், மொபைல் போன் வழியாகக் கிடைக்கும் தேடல் வினாக்கள், 4 மடங்கு அதிகரித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குப் பின் இது மொத்தம் 50 மடங்கு அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு வாக்கில், மொபைல் வழி இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியாக உயரும் வாய்ப்புகள் இருப்பதாக ராஜன் குறிப்பிட்டார்.
இந்தியாவில் பொருட்கள் வாங்குகையில், இன்டர்நெட்டில் அது குறித்து தேடிவிட்டு, நேரடியாகச் சென்று வாங்கவே, பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.
இன்டர்நெட் வழியாக வங்கி கணக்குகளைக் கையாள்வோரின் எண்ணிக்கை, கடந்த 18 மாதங்களில், 200 மடங்கு அதிகரித்துள்ளது.
இன்டர்நெட் வழி பொருட்களை விற்பனை செய்பவர்கள், தங்கள் இணைய தளத்தினைத் தெளிவான முறையில் வடிவமைத்து, சிக்கல்கள் எதுவுமின்றி, பயன்படுத்துவோருக்கு பயனளிக்கும் வகையில் நடத்த வேண்டும். பெரும்பாலான இந்தியர்கள், பொருட்கள் வழங்கப்படுகையில் பணம் செலுத்துவதனையே விரும்புகின்றனர் என்று கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக