இந்தியாவில் மொபைல் பயன்படுத்து பவர்களில் 53% பேர் தங்கள் மொபைலைத் தொலைக் கின்றனர்; அல்லது திருடுபவர் களிடம் விட்டு விடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு தொலைப் பவர்கள் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.
74% பேர் தங்கள் பெர்சனல் தகவல்களை இன்னொரு போன் வழி ரிமோட் வழியில் நீக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளைத் தங்கள் மொபைல் போன்களில் பதித்துள்ளனர். இந்த சேவைக்கென அதிகப் பணம் கொடுத்திருக்கின்றனர். ஆனால், பணத்திற்கேற்ற முழுமையான சேவையினை அவர்கள் பெறுவதில்லை.
42% பேர் தான், தங்கள் மொபைல் போன்களை பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாத்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்து பவர்களாக உள்ளனர்; மற்றும் ஏற்கனவே மொபைல் போன்களைத் தொலைத் தவர்களாக உள்ளனர்.
போனை லாக் செய்திடவும், தகவல்களை அழிக்கவும் மற்றும் ரிமோட் நிலையில் போன் எங்குள்ளது என்று அறியவும் உதவுகின்ற சாப்ட்வேர் தொகுப்பினைப் பெற 80% தயாராக உள்ளனர். 60% பேர் தங்கள் மொபைல் போன் வழியே, வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கத் தயாராக உள்ளனர்.
மொபைல் உபயோகிப்பவர்களை விட மொபைல் திருடர்கள் அதிகமா ?வியப்பாக உள்ளது !
பதிலளிநீக்கு